தமருகம்

தமருகம்
எஸ்போஸ் கவிதைகள்

விமர்சனங்கள்

விமர்சனங்கள்
அனாரின் " எனக்கு கவிதை முகம்"

சிறுகதை

சிறுகதை
மீட்சியற்ற நகரத்தில் செம்பகம் துப்பிய எச்சம்

அஞ்சலி

அஞ்சலி
ராஐமார்த்தாண்டன்-மரணத்தின் வெற்றிடத்திலிருந்து

நிசங்கன் கவிதைகள்

Tuesday, October 14, 2008

தொடரும் தவிப்புகள்

இரட்சித்த வீட்டில்
நீ குளித்து விட்டுப் போன சோப்பில்
உதிரும் உன் உடலின்
வாசனையை நுகர்கிறேன்
எனது துவாயில் கசியும் உன்
பிரியங்களும்
விசும்பலில் துடைத்த எனது
ஆடையும்
நேற்று மட்டும் உனதாயிருந்த
வாசனனத்திரவியங்களும்
நீ வரும் வரை நமத்துப்போன
எனது தாபங்களுக்காக
காத்திருக்கும்

வெற்றுக்காத்திருப்புகள்

புழுதிபடிந்த தெரு மதில்களுக்குப் பின்னால்
சுமையாகிவிட்ட காத்திருப்புகள்
கனத்த இரவில் விசிறப்பட்ட நட்சத்திரங்களில்
இறுகாத கைகளை இறுக்கும் போது
சத்தங்கள் மௌனிக்கத் தொடங்கும்
நாளைய சோற்றுப்பருக்கைக்கான
இன்றைய இரவில்
நுரைத்த கனவுகளும்
உலர்ந்த ஆசைகளும்
சிலந்தி வலைகளுக்கு மத்தியில்
விறைத்து போயிற்று


இளமைக் கனவுகள்

உலரும் என் இளமைக் கனவுகள்
அஸ்தமிக்குமிக்கும் சூரியனில் கறுக்கும் நிலாச்சாரல்
கனக்கும் மேகங்கள் நடுவே
நடுங்கும் என் விரல்கள்
என் நிறமற்ற இளமைக் கனவுகள்
கரையும் வர்ணங்களின்
இடையில்
நழுவித் தொங்கும்
வெறுமையாக


மரத்த மனம்

விறைத்துப் போன உணர்வுகளையும்
சபிக்கப்பட்ட மௌனத்தின் உறுப்புகளையும்
தேடி அலையும் என் விரல்கள்
விடியலின் நிறங்களும் கரைந்து போக
கனத்த மாலைகளும் புழுதியான தென்றலும்
என் உடலுக்காக காத்திருக்கும்

உடைந்த நீர்க்குடத்தில்
முளைத்த பூச்செடியைப் பார்ப்பதற்கு
ஏங்குத் கண்களை நோக்கி
கட்டெறும்புகள் படையெடுக்கும்
ஆறடி குழியுள் விழுவதற்கு முன்பும்
மரத்த முலையுடன்
சாவைத் தொலைத்துவிட்டு
சபிக்கப்பட்ட பிறவியாக
நான் உன்னுடன்